Wednesday, November 9, 2016

என்னுரை

தமிழ் நாடகங்களின் பால் எனக்கு வெறித்தனமான பற்று உண்டு

எனது பத்தாவது வயதில், பெண் பாத்திர மேற்று நடித்தவன் நான்

கிட்டத்தட்ட ஐம்பத்தைந்து ஆண்டுகள்..ஆர்ப்பாட்டமின்றி..தமிழ் நாடகங்களில் ஏதேனும் ஒரு விதத்தில் பங்கேற்று வந்த பெருமை எனக்கு உண்டு

சங்ககாலம், சிலப்பதிகார ,மணிமேகலை காலங்களிலிருந்தே, நாடகங்களுக்கான சில வரைமுறைகள் இருந்து வருகின்றன.அதை இன்றளவும் பின் பற்றி வருவதே நம் நாடகங்களின் சிறப்பாகும்

நம் நாடு சுதந்திரம் அடைவத்ற்கு முன்னரே ..பல நாடகக் கலைஞர்கள்..த்ங்கள் நடிப்பாலும், பாடும் திறமையினாலும் மக்களிடையே, சுதந்திர உணர்ச்சியை ஊட்டினார்கள்.சுதந்திரம் அடைய, கலைஞர்கள் ஆற்றிய பணியினை மறக்கவோ..மறுக்கவோ முடியாது

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், பல நாடகக் குழுக்கள் தோன்றின.சமுக நாடகங்கள்,நகைச்சுவை நாடகங்கள்,சரித்திர நாடகங்கள் என நாடகங்கள் அரங்கேறின.குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியை, நாடகங்களின் பொற்காலம் எனலாம்

தொலைக்காட்சி வந்ததற்குப் பின்...நாடகங்கள் சற்று நலிவடைந்தன என்பதை ஒப்புக் கொண்டாலும்..நாடகங்களை அழித்துவிட முடியாது என்பத்ற்கு தமிழகத்தில் விடாமல் நாடகங்களை நடத்திவரும் குழுக்களே சான்று

அக்குழுக்கள் பற்றியும் சிறு குறிப்புகளை  இந்நூலில் கொடுத்துள்ளேன்

நாடகக்கலையை இன்று கட்டிக் காத்துவரும் பெரும்பான்மையான குழுக்கள் தொழில்முறைக் கலைஞர்களைக் கொள்ளாததால், வாழ்வாதாரத்திற்கு பணத்தை நாடகங்கள் மூலம் எதிர்ப்பார்க்காது கலைச்சேவையை மட்டுமே குறிக்கோ ளாகக் கொண்டு பணியாற்றி வருகிறார்கள் எனலாம்

தமிழ் நாடக வரலாறு குறித்து..வளர்ச்சிக் குறித்து ஒரு அணில் பங்கேனும் பணியாற்றிட வேண்டும் என்ற என் அவாவே இந்நூல் உருவாகக் காரணம் எனலாம்

இந்நூல், பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள், ஆய்வு மேற்கொள்வோர் ஆகியோருக்கு பயன்படும் வகையில் உருவாகியுள்ளது எனலாம்

இந்நூலைப் படித்து அனைவரும் பயனடைய வேண்டும் என்பதே என் அவா


நன்றி



க்ஷேத்ரா அடுக்ககம்                                                          டி.வி.ராதாகிருஷ்ணன்
53-எச், பீச் ரோடு
கலாக்ஷேத்ரா காலனி,
பெசன்ட் நகர், சென்னை - 90


No comments:

Post a Comment