Sunday, April 24, 2016

32- தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்

                               

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்
தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளை வளர்க்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட அரசு அமைப்பு இதுவாகும்

1955ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த மைப்பு 27-11-1956ல் சங்கங்களின் பதிவு சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டது.

1973ஆம் ஆண்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இவ்வமைப்பின் மூலம் நாட்டுப்புற கலைகள், நாடகம்,தெருக்கூத்து  , பரதம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடத்டப்படுகிறது.கலத்துறையைச் சேர்ந்த கலைஞர்களுக்கு கலைமாமணி என்ற சிறப்பு விருதும் வழங்கப்பட்டு வருகிறது.இதுவரை 1500க்கும் மேற்பட்டோர் இவ்விருதினைப் பெற்றுள்ளனர்.

நவிவுற்ற கலைஞர்களுக்கு மாத உதவித் தொகை, நலிவுற்ற கலைஞர்களின் குடும்பத்தினருக்கு மாத உதவித் தொகை போன்ற பல திட்டங்கள் மூலம் கலைஞர்களுக்கு உதவி அளிக்கப்பட்டு வருகிறது.

தவிர்த்து, கலைஞர்கள் வெளியூர்களுக்கு நிகழ்ச்சிகள் நடத்தச் சென்றால், அவர்கள் ரயிலில் பயணம் செய்ய ரயில் கட்டணச் சலுகைப் பெற ரயில்வேக்கு பரிந்துரை செய்கிறது.

வெளிமாநிலங்களிலிருந்து கலைஞர்களை வரவழைத்து அம்மாநில நிகழ்ச்சிகளையும், நம் மாநிலக் கலைஞர்கள் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி நம் நிகழ்ச்சிகளையும் நடத்துகிறது.

சிறந்த கலாச்சார நிறுவனங்கள் என 27 நிறுவனங்களுக்கும், சிறந்த நாடகக் குழுவென 18 குழுக்களுக்கும் கேடயம் அளித்து கௌரவித்துள்ளது

சில அரசு கலாச்சார நிகழ்ச்சிகளை பொறுப்பேற்று நடத்துகிறது.

தமிழக அரசின் மூலம் அறிவிக்கப்படும் தலைவர், செயலாளர்கள் இம்மன்றத்தின் செயல்பாடுகளைக் கவனிக்கின்றனர்.இவர்கள் பதவிக் காலம் 3 ஆண்டுகள் ஆகும்.

தற்போது இம்மன்றம் செயல்பட்டுவரும் முகவரி

"பொன்னி"
31, குமாரசுவாமி ராஜா சாலை
சென்னை-600028

1 comment:

  1. பாராட்டுக்குறிய அரிய தமிழ் கலைஞர்களை ஊக்குவிக்கும் பணியாகும். அடுத்த கலைமாமணி விருதுக்கான விண்ணப்பங்கள் எப்போது முதல் வரவேற்கப்படுகின்றன என் அறிய விழைகிறேன்.

    ReplyDelete