Saturday, April 2, 2016

25 - "TV" S,வரதராஜன்

                                   

பேங்க் ஆஃப் இந்தியாவில் 28 ஆண்டுகள் பணிபுரிந்தவர் எஸ்.வரதராஜன்....தன்னுடன் பணிபுரிந்த ஸ்ரீனிவாசன் என்பவருடன் சேர்ந்து 1975ஆம் ஆண்டு வெங்கட் எழுதிய "என் கேள்விக்கு என்ன பதில்" நாடகத்தின் மூலம் முதல் மேடையேறினார்.பின்னர், கிரேசிமோகன் எழுதிய "36 பீரங்கி லேன்' வேதம் புதிது கண்ணன் எழுதிய "சொல்லடி சிவசக்தி" "அவனுடைய செல்லம்மா" ஆகிய நாடகங்கள் அரங்கேறின.

அவர் நாடக மேடையேறிய சமகாலத்திலேயே டிவியிலும் நுழைந்தார்

1977 தொடங்கி 1996 வரை சென்னைத் தொலைக்காட்சியிலும், பின்னர் எட்டு ஆண்டுகாலம்
சன், விஜய்,ராஜ்போன்ற தனியார் தொலைக்காட்சிகளிலும் பணியாற்றினார்

1986 முதல் தொலைக்காட்சித்
தொடரில் நடிக்கத்தொடங்கினாலும் 1994 தொடங்கி இயக்குனர்சிகரம் கே பாலசந்தர் அவர்களின்
தொடர்களில் நடித்து திறமையான நடிகர்என்ற
ஐஎஸ்ஐ முத்திரை பெற்றார்
அவரது அபிமானத்திற்குரிய அறிமுகங்களில் வரதராஜனுக்கு ஒரு தனி இடம்உண்டு
இதுவரை 50க்கும்அதிகமான தொடர்களில் நடித்துள்ளார்
தொடர்ந்து ஏதாவது ஒரு துறையில் நாற்பதாண்டுகளாக
டிவியில் தோன்றுவதாலேயே
இவர்  TV வரதராஜன் என்று எல்லோராலும் அழைக்கப்படுகிறார்

நாடகங்கள் மீது தணியாத தாகம் கொண்டவர் வரதராஜன்

1994ல் தனக்கென யுனைடெட் விஷுவல்ஸ் என்ற குழுவைத் தொடங்கி இருபது ஆண்டுகளில் 18 நாடகங்களைத் தயாரித்திருக்கிறார் . நடுத்தரவர்க்கத்தின்
பிரச்சனைகளை   விரசமில்லா நகைச்சுவையுடன் எடுத்துச் சொல்வதில் தங்களுக்கென தனி முத்திரை பதித்திருக்கிறார்கள் இக்குழுவினர்

இவரது நாடகங்கள் சில...

ஜோடிப் பொருத்தம், எல்கேஜி ஆசை, மற்றும்பலர், ஆசைக்கும், ஆஸ்திக்கும், மெகா சீரியல், வாஸ்து வாசு,பிளாஸ்டிக் கடவுள்,ரீல் எஸ்டேட்,ஐபிஎல் குடும்பம்,நேரடி ஒளிபரப்பு .

இவரது குழுவின் முதல் எழுத்தாளர் சிறகு ரவி

வேதம்புதிது கண்ணன் மட்டும் எட்டு நாடகங்கள் எழுதியிருக்கிறார் அடுத்ததாக அதிகமாக எழுதியவர் சந்திரமோகன்

சோ அவர்கள் வரதராஜனின் கலை ஆர்வத்தைக் கண்டு, "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" என்ற தனது பிரபல நாடகத்தை மீண்டும் வரதராஜன் அரங்கேற்ற அனுமதி அளித்தார்.சோ நாடகத்தில் ஏற்ற அதே நாரதர் வேடத்தில் வரதராஜனும் பிரமாதப்படுத்தினார்.

பின் துக்ளக் சத்யா இவருக்காக இது நம்ம நாடு என்ற முழுநீளஅரசியல் நையாண்டி நாடகம் எழுதினார். இந்தியாவில்மட்டுமின்றி அமெரிக்காவிலும் மிகப்
பெரிய வரவேற்பைப் பெற்ற
நாடகம் இது நம்ம நாடு

பிரபல பத்திரிகையாளரும் விமரிசகருமான வி.ஸ்ரீனிவாசன் (வீஎஸ்வி) தான் எழுதிய ஸ்ரீதியாகராஜரை நாடகமாக்க, பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் இசையமைக்க வரதராஜன் தியாகராஜராக நடிக்க, "ஸ்ரீதியாகராஜர்" நாடகம் மாபெரும் வெற்றி நாடகமாக மேடைகளில் தற்சமயம் நடந்து வருகிறது.

இயல், இசை, நாடகம் மூன்றும் ரசிகர்களை அரங்கம் நிறைய ஈர்க்கும் வகையில் இந்நாடகத்தில் அமைந்திருப்பது இதிலுள்ள சிறப்பு அம்சமாகும்



No comments:

Post a Comment