Friday, April 1, 2016

23 - "காத்தாடி" ராமமூர்த்தி


                       


"காத்தாடி" ராமமூர்த்தி

"சோ" 1959ல், "என்னிடம் கிடைத்தால்" என்ற நாடகத்தை எழுதி நண்பர்களுடன் சேர்ந்து நடித்தார்/அதில், ஒரு பத்திரிகை அலுவலகத்தில் மூன்று கதாபாத்திரங்கள் வருவார்கள்.

ஒருவர் பத்திரிகை ஆசிரியர் இடும்பன்
மற்றவர் உதவி ஆசிரியர்..ஆட்டம்பாம்
மூன்றாமவர் கார்ட்டூனிஸ்ட் .அவர் பெயர் காத்தாடி

கார்ட்டூனிஸ்ட் ஆக ராமமூர்த்தி என்பவர் நடித்தார்.இந்நாடகம் மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.அந்த கதாபாத்திரத்தின் பெயரும் நடிகரின் பெயருடன் ஒட்டிக்கொண்டது.ஆம்..அந்த நடிகரே... "காத்தாடி" ராமமூர்த்தி என்னும் புகழ்பெற்ற நாடக நடிகர் ஆவார்.த்னியார் நிறுவனமொன்றில் அதிகாரியாய் வேலை செய்தபடியே தன் கலைப்பணியைத் தொடர்ந்தார் ராமமூர்த்தி.

1938 ஆம் ஆண்டு பிறந்த சுந்தரேஸ்வரர் ராமமூர்த்தி, 50க்கும் மேற்பட்ட நாடகங்களில் 6500 முறைகளுக்கு மேல் நடித்து சாதனை புரிந்து வருபவர் ஆவார்.இவரது ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் நாடகக் குழுவினருக்கு கே.கே.ராமன், சாரதி, ஆகியோர், "good bye to love", "matchless matchess","runaway husband",  போன்ற நகைச்சுவை நாடகங்களை எழுதினர்.

விசு இவர்களுக்காக எழுதிய "பட்டினப்பிரவேசம்" நாடகமும், "டௌரி கல்யாணம்" நாடகமும் பின்னர் திரைப்படங்களாகின."பட்டினப்பிரவேசம்" பார்த்த கேபி, காத்தாடி, டில்லி கணேஷ் நடித்த அந்நாடகத்தை திரைப்படமாக்கியதுடன் , அவர்களையும் படத்தில் நடிக்க வைத்தார்.பின்னர் பல திரைப்படங்களில் காத்தாடி நடித்து வருகிறார்.தவிர்த்து பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

பின்னர், இவரது குழுவினருக்கு கிரேசி மோகன், "அய்யா..அம்மா அம்மம்மா" என்ற நாடகத்தை எழுதினார்.

சன் ஆஃப் சாம்பு நாடகத்தில், சாம்பவின் மைந்தனாக நடித்த இவர் நடிப்பை அன்று பாராட்டாத மக்களே இல்லை எனலாம்

எஸ்,எல்.நாணு இவர்களுக்காக "நீங்க யார் பக்கம்". பிள்ளையார் பிடிக்க, வாட்ஸ் அப் வாசு" "நினைச்சது ஒன்னு", அப்பா..அப்பப்பா", சூப்பர் குடும்பம், ஐக்கியமுன்னணி'ஆகிய நாடகங்களை எழுதினார்.

சென்னையீல் இன்றைய பிரபல நாடக் குழுக்களில் "காத்தாடியின்" ஸ்டேஜ் கிரியேசஷன்ஸும் ஒன்று எனலாம்

சமீபத்தில் ராமமூர்த்தியின் 60 ஆண்டு நாடக சேவையும், அவரது குழுவின் பொன்விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது


No comments:

Post a Comment