Sunday, March 20, 2016

14 - விவேகா ஃபைன் ஆர்ட்ஸ்

                                   

சோ ராமசாமி ஒரு நடிகர், பத்திரிகை ஆசிரியர்,நாடக ஆசிரியர், வக்கீல் என பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர்.அரசியல் நையாண்டி இவரது ஸ்பெஷாலிட்டி.

இவருக்கு சோ என்ற பெயர் வரக் காரணம் என்ன?

பகீரதன் எழுதிய "தேன்மொழியாள்" என்ற நாடகத்தில் அவர் ஏற்ற பாத்திரத்தின் பெயர் சோ.அதனால்தான் அவருக்கு அப்பெயரே நிலைத்துவிட்டது.

திரு பட்டு அவர்கள் எழுத சோ நடித்த 'பெற்றால்தான் பிள்ளையா" என்ற நாடகம் சிவாஜி நடிக்க "பார் மகளே பார்:"திரைப்படமாக ஆன போது இவர் நாடகத்தில் ஏற்ற பாத்திரத்திலேயே திரையிலும் நடிக்க நேர்ந்தது.

வக்கீலான இவர் 1957 முதல் 1962 வரை உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்தார். பின்னர் டிடிகே நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக இருந்தார்.

விவேகனந்தா கல்லூரியில் படிக்கும் போது 1957லிருந்து நாடகங்களில் நடித்து வந்த இவர், தான் படித்த கல்லூரி பெயரிலெயே "விவேகா ஃபைன் ஆர்ட்ஸ்" என்ற நாடகக் குழுவை ஆரம்பித்தார்.தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்களே நடிகர்கள்

இவரது நாடகங்கள் சில, "ஒய் நாட், மெட்ராஸ் பை நைட்,கோ வாடிஸ், சம்பவாமி யுகே யுகே, மனம் ஒரு குரங்கு, யாருக்கும் வெட்கமில்லை, நேர்மை உறங்கும் நேரம், சரஸ்வதி சபதம், என்று தணியும் இந்த சுதந்திர தாகம், முகமது பின் துக்ளக்"..அனைத்து நாடகங்களும் பல நூறு முறைகள் நடந்துள்ளன.

இவரது முகமது பின் துக்ளக்...அன்றைய அரசியல் வாதிகளை கிண்டல் செய்யும் வகையில் இருந்தது...அதுவே...சமீபத்தில் மேடையேறிய போதும் இன்றும் பொருந்துவதாக இருந்தது.

22 நாடகங்களை எழுதி நடித்துள்ள இவர், 14 திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார்.200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.எங்கே பிராமணன், ராமாயணம், மகாபாரதம் என எட்டு புதினங்களையும் எழுதியுள்ளார்.

1999 முதல் 2005 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.

No comments:

Post a Comment