Sunday, March 13, 2016

6 - குறுஞ்செய்திகள்



1) புளியமாநகர் திரு சுப்பா ரெட்டியார் என்பவர் பாலர் சபை ஒன்றை நடத்தினார்.அவர்கள், இலங்கை,மலேயா,போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று நாடகம் நடத்தினர்.நெடுங்காலம் இயங்கி வந்த இந்தக் குழுவில் நடித்தவர்களில் திரு பி.எஸ்.கோவிந்தன் என்ற நடிகர் குறிப்பிடத்தக்கவர்

2)திருச்சி பால பாரதி சபை "பட்டினத்தார்" நாடகத்தை மேடையேற்றினர்

30எட்டயபுரம் இளையராஜா காசி விஸ்வனாத பாண்டியன்  சிறுவர் நாடகக் குழு என்ற பெயரில் நாடகங்கள் நடத்தினார்.இவர் நுண்கலைகளில் ஆரவமிக்கவர்.நாடகம் எழுதுவதிலும் திறமைசாலி..இராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டு'தயாளன்" என்ற பெயரிலொரு நாடகம் நடத்தினார்.

4)நாடகாசிரியர் டி.பி.பொன்னுசாமி பிள்ளை, "ஸ்ரீ மங்கள பால கானசபா" என்ற குழுவைத் தொடங்கினார்.இவர்கள், "இழந்த காதல்". விமலா அல்லது விதவையின் கண்ணீர்" ஆகிய அரிய சமூக நாடகங்களை நடத்தினர்.இந்த நாடக சபையில் சிவாஜி கணேசன் நடித்துள்ளார்.இந்த நாடக சபையை திரு என்.எஸ்.கிருஷ்ணன் வாங்கி, என்.எஸ்.கே., நாடக சபை எனப் பெயரை மாற்றி நாடகங்களை நடத்தினார்.இந்த நாடக சபையின் பொறுப்பை ஏற்ற எஸ்.வி.சஹஸ்ரநாமம், ப.நீலகண்டன் எழுதிய "நாம் இருவர்" என்ற நாடகத்தையும்,"பைத்தியக்காரன்" என்ற பெயரில் தானே எழுதிய சமுதாய சீர்திருத்த நாடகத்தையும் நடத்தினார்.

5)1944ல் நவாப் ராஜமாணிக்கம் குழுவிலிருந்து விலகிய திரு டி.கே.கிருஷ்ணசாமி, சக்தி நாடக சபையைத் தோற்றுவித்தார்.எஸ்.டி.சுந்தரம் எழுதிய "கவியின் கனவு" என்ற சரித்திர கற்பனை நாடகத்தை அரங்கேற்றினார்.காட்சியமைப்பில் பல புதுமைகளைச் செய்தார்.விதி, தோழன், ஜீவன் ஆகிய நாடகங்களை தங்கள் குழுவிற்காக தயாரித்தார்

6)காரைக்குடி வைரம் அருணாசலம் செட்டியார், "ஸ்ரீராம பால கான சபா"வைத் தோற்றுவித்தார்.திருமழிசையாழ்வார்,பக்த சாருகதாசர்,தாகசாந்தி, குடும்ப வாழ்க்கை முதலிய சில புதிய நாடகங்களை அரங்கேற்றினார்.இதன் மூலம் பல புதிய நடிக, நடிகைகளை உருவாக்கினார்

7)திரு கே.என்.ரத்தினம் தேவி நாடக சபையை உருவாக்கி, கலைஞர் கருணாநிதி எழுதிய "மந்திரிகுமாரி" நாடகத்தையும், திரு ஏ,கே.வேலனின் "சூறாவளி" நாடகத்தையும் அரங்கேற்றினார்

8)இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் "கீசகன்""பிருதிவி ராஜன்", ஆகிய நாடகங்களை கா.நமசிவாய முதலியார் எழுதினார்

9)காந்திஜி பார்த்த ஒரே தமிழ் நாடகம் நந்தனார்.அதில் கூறியிருந்த தீண்டாமை அவரது மனதைத் தொட்டது

10)நவாப் ராஜமாணிக்கம் தனது இன்பசாகரன் என்ற நாடகத்தில் மேடையில் சர்க்காவில் நூல் நூற்பதைக் காட்டினார்

11)எஸ்.வி.ஸகஸ்ரநாமம் தன் சேவா ஸ்டேஜ் மூலம் ரபீந்திர நாத் தாகூரின் 'விஷன்" என்ற சிறுகதையை கண்கள் என்ற பெயரில் நாடகமாக்கினார்

12)அந்த நாளில் புகழ் பெற்ற நாவல்கள் திரைப்படமாவத்ர்கு முன் நாடகங்களாக நடத்தப்பட்டன.தி.ஜானகிராமனின் , நாலு வேலி நிலம், கு.அழகிரிசாமியின் பிரசிடெண்ட் பஞ்சாட்சரம், பி.எஸ்.ராமையாவின் போலீஸ்காரன் மகள், கல்கியின் கள்வனின் காதலி ஆகியவைஅவற்றுள் சில

13) சுதந்திர போராட்ட காலத்தில் நாடகங்கள் பெரும் பங்கு பெற்றன."கதரின் வெற்றி" தேசபக்தி" ஆகிய நாடகங்கள் தேசிய உணர்வைச் சொல்லின.

இதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

No comments:

Post a Comment