Sunday, March 27, 2016

21 - எஸ்.வி.சேகரும்...நாடகங்களும்

                 


எஸ்.வி.சேகரும்...நாடகங்களும்

இன்றைய காலகட்டத்தில் நகைச்சுவை நாடகங்கள் என்றாலே...எஸ்.வி.சேகரும்,கிரேசி மோகனும் தான்.

எஸ்.வி.சேகரின் நாடகங்களில், நகைச்சுவையும்...அந்தந்த நாளுக்கு ஏற்ப அரசியல் நையாண்டியும் இருக்கும்.இவரது குறிக்கோளே..நாடகம் நடக்கும் 100 மணித்துளிகளில் 200 சிரிப்புகள்.

இதனிடையே, பல சமூக சேவைகள், மக்கள் நலப் பணிகள் என சேகர் செய்து கொண்டிருந்தார்.யாருக்கும் பயப்படாது மனதில் தோன்றியதை அப்படியே சொல்லிவிடுவதுதான்..இவரின் பிளஸ் மற்றும் மைனஸ் பாயிண்டுகள். முதல் காரணமாகவே  அதிமுகவில் மைலாப்பூர் தொகுதியில் சட்டசபைக்கு வெற்றிகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இரண்டாவது காரணத்தாலேயே அதிமுக விலிருந்து வெளியேறினார்.

மெக்கானிக்கல் இஞ்சினீரிங் பட்டயப் படிப்பும், ஏர்கண்டிஷன் மற்றும் ரெஃப்ரிஜெரேஷன் பட்டய படிப்பும் முடித்த சேகர் பிரபல இசை மேதையான ஜி.ராமனாதனின் பேத்தி உமாவை மணந்தார்.

​1960 ல் இவரது நாடகப்பணி ஆரம்பமானது. 70 களில் தன தந்தை திரு எஸ் வி வெங்கடராமன் அவர்களின் கற்பகம் கலா மந்திர் நாடகக்குழுவில் மேடை நிர்வாகியாகவும்,ஸ்பெஷல் ஒலி அமைப்பாளராகவும் பணியாற்றினார். திரு வி.கோபாலகிருஷ்ணன் இவருக்கு பொட்டு வைத்து நடிகராக்கினார். 1973இல் தன் சொந்த நாடக்குழு 'நாடகப்ப்ரியா'' என்று ஆரம்பித்தார். இவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் கிரேசி மோகன் ,கோபு பாபு, கிருஷ்ணகுமார் ,நிலா ஆகியோர்.

இவரது நாடகங்கள் பல வெளிநாடுகளிலும் நடந்துள்ளது. 1985 ஆம் ஆண்டு...காலை 7-47 முதல் இரவு 1-49 வரை இவரது நாடகங்கள் தொடர்ந்து சென்னையில் நடந்து, லிம்கா புக் ஆஃப் ரிகார்ட்ஸில் சாதனையாகியுள்ளது

மைலாப்பூர் அகடெமி. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இவரை சிறந்த நகைச்சுவை நடிகராகத் தேர்ந்தெடுத்துள்ளது. தமிழக அரசின் "கலைவாணர் விருதும்" கலைமாமணி விருதும் இவருக்குக் கிடைத்துள்ளது.தவிர்த்து, சென்னை சபாக்கள் பல இவருக்கு பலபட்டங்கள் அளித்து கௌரவித்துள்ளன.

​(2003) + ​2015ல் மத்திய அரசு சினிமா தணிக்கைக் குழுவில் உறுப்பினராக இவரை நியமித்துள்ளது.இவரது திறமையைப் பார்த்து கே.பாலசந்தர் , "வறுமையின் நிறம் சிவப்பு", "நினைத்தாலே இனிக்கும்" ஆகிய படங்களில் நடிக்க ​இவரை அறிமுகப்புடுத்தினார்..

சேகர் இதுவரை கிட்டத்தட்ட​95 படங்கள் நடித்துள்ளார். இவரது நாடகப்பிரியா நடத்தியுள்ள நாடகங்களில் சில...

கண்ணாமூச்சி, காதுல பூ, ஒன் மோர் எக்சார்சிட், காட்டுல மழை, 1000 உதை வாங்கிய அபூர்வ சிகாமணி, யாமிருக்க பயமேன், தத்துப்பிள்ளை. மகாபாரதத்தில் மங்காத்தா" வால் பையன், 'யாமிருக்க பயமேன், ​'​​​சிஎம்​'​ ஆ ​'​பிஎம்​'​ ஆ"
​இது வரை 24 நாடகங்களும் 6200 காட்சிகளும் நடத்தியுள்ளார்.​

இவருக்கான நாடகங்களை இவரைத் தவிர்த்து,  கே.கே.ராமன்​ சாரதி, வெங்கட், , ஆகியோர் எழுதியுள்ளனர்.

தொலைக்காட்சிக்கான இவரது நாடகங்கள் வண்ணக்கோலங்கள் பாகம் 1 ,பாகம்-2, நம் குடும்பம்​,டாக்சி டாக்சி ​ ஆகியவை.

சபாக்களின் வசூல் சக்கரவர்த்தியானவர் ​எஸ்.வி.​சேகர் என்பது பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று.



No comments:

Post a Comment