Thursday, March 17, 2016

10- என்.எஸ்.கே., மற்றும் எம்.ஆர்.ராதா

                     

"மங்கள பால கான சபா" என்ற குழுவை நாடக ஆசிரியர் டி.பி.பொன்னுசாமி பிள்ளை நிறுவினார்."இழந்தகாதல்". விதவையின் கண்ணீர் நாடகங்களை நடத்தினார்.இந்த நாடக சபையில்தான் வி.சி.கணேசன் (பின்னாளில் சிவாஜிகணேசன்) நடித்தார்.

இந்த சபையை எ,எஸ்.கிருஷ்ணன் வாங்கி பெயரை "என்.எஸ்.கே.நாடக சபை" என மாற்றினார்.

ஒரு சமயம் ஒரு வழக்கு சம்பந்தமாய்  என்.எஸ்.கே., கைதானார்.அப்போது எஸ்.வி.சகஸ்ரநாமம் அச்சபையை தன் பொறுப்பில் ஏற்று. ப.நீலகண்டன் எழுதிய "நாம் இருவர்" என்ற நாடகத்தையும், தானே எழுதிய "பைத்தியக்காரன்" என்ற சமூக சீர்திருத்த நாடகத்தையும் நடத்தினார்.என்.எஸ்.கே., விடுதலையாகி வந்ததும் குழுவை அவரிடம் ஒப்படைத்தார்

                                   

தமிழ் நாடகமேடையில் ஒரு புரட்சியை உண்டாக்கியவர் எம்.ஆர்.ராதா எனப்பட்ட ராதாகிருஷ்ணன் ஆவார்.

இவர் ஆரம்ப காலத்தில் நாடகத்தில் பாலகிருஷ்ணனாக நடித்தார்.வசனம் ஏதும் கிடையாது. பின்னர் பல நாடகக் குழுக்களில் சேர்ந்து நடித்தார்.நடிப்பில் பல பாராட்டுகளைப் பெற்ற ராதா, தானே ஒரு நாடக சபையை ஏற்படுத்தினார்."சரஸ்வதி கான சபா" எனப் பெயரிட்டார்.

"இராஜ சேகரன்" "இலட்சுமிகாந்தன்" போன்ற நாடகங்கள் அரங்கேறின.

இவரது நாடகங்களில் பெரிய மேடை,அலங்காரங்கள் கிடையாது.நடிப்பிற்கே முதலிடம்.இவரது சீர்திருத்த நாடகங்கள் அனைவரையும் கவர்ந்தது.ஆனாலும், இன்றலவும் பேசப்படும் நாடகமாக அமைந்தது, மறக்கமுடியாத "ரத்தக் கண்ணீர்". இந்நாடகத்தி ராதாவின் நடிப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை எனலாம்.இந்நாடகம் மட்டுமே 5000 முறைகளுக்கு மேல் நடந்ததாகத் தெரிகிறது.

இந்நாடகம் அவருக்குப் பிறகும், அவரது மகன்கள் எம்.ஆர்.ஆர்.வாசு, ராதாரவி ஆகியோரால் நடத்தப்பட்டது.

No comments:

Post a Comment