Thursday, March 17, 2016

11- அண்ணாவும்...கலைஞரும்

             

தமது பேச்சாற்றல் மூலம் மக்களை ஈர்த்தவர் பேரறிஞர் அண்ணாத்துரை,மக்களால் அன்பாக அண்ணா என அழைக்கப்பட்டவர்.இவர் தனது நாடகங்கள் வாயிலாகவும் கொள்கைகளை பரப்பியவர்.

ஏராளமான நாடகங்களை எழுதியுள்ளார்.

"ஓர் இரவு", "சொர்க்க வாசல்","சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்","நீதிதேவன் மயக்கம்"."நல்ல தம்பி", "வேலைக்காரி","சந்திரோதயம்". ஆகியவை குறிப்பிடத்தக்க நாடகங்களாகும்.

சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியத்தில் வி.சி.கணேசன் என்ற இளைஞர் நடித்தார்.ஒருநாள் நாடகத்தைப் பார்க்க வந்த பெரியார், கணேசனின் நடிப்பைப் பார்த்து..சிவாஜி நீதாண்டா என மனமார பாராட்டினார்.அன்று முதல் கணேசன்...மக்களால் சிவாஜி கணேசன் என்று அழைக்கப்பட்டார்

ஓர் இரவு நாடகத்தை ஒரே இரவில் எழுதி முடித்தாராம்.இந்நாடகத்தை கண்டுக் களித்த கல்கி அவர்கள்..

"தமிநாட்டுப் பெர்னாட்ஷா" என்றார் அண்ணாவை.. அண்ணா எழுதிய நாடகங்கள் கே.ஆர்.ராமசாமியின் கிருஷ்ணன் நாடக சபைக்கு புகழ் சேர்த்தன.

"நாடக மேடையில், இவரது அழகு தமிழ் நடனம் ஆடிற்று, உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பியது. தன்மான உணர்வைத் தூண்டியது.தமிழ் மொழியின் பெருமையைப் பேசியது.மாற்றாரை எள்ளி நகையாடியது.பிற்படுத்த பட்டவரிடையே நமக்கு ஒரு நல்லத் தலைவன் கிடைத்தான். என்ற மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது" என்கிறார் பேராசிரியர் ஜெ.ஸ்ரீசந்திரன் தனது நூல் ஒன்றில்.

கலவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் போன்றோரை திராவிட இயக்கத்தில் சேர்த்த பெருமை அண்ணாவின் நாடகங்களுக்கு உண்டு எனலாம்.




"திராவிடக் கழகக் கொள்கைகளை நாட்டு மக்களுக்குப் பரப்புவதில் அண்ணாவிற்கு இணையாக விளங்கியவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.

எண்ணற்ற நாடகங்களை எழுதிக் குவித்த கலைஞரின் "பராசக்தி" மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது எனலாம்.

கடவுள் பெயரைக் கூறி இழிவான செயல் புரிபவர்களின் பித்தலாட்டங்களை வெளிக் கொணர்ந்தது "பராசக்தி" நாடகம்.பின்னர் சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், சஹஸ்ரநாமம் நடிக்க படமாக வந்து. மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது.

பெண்களின் உரிமைக்காக இவரால் எழுதப்பட்ட நாடகம் "நச்சுப் பொய்கை"

கலைஞர் எழுதிய "தூக்கும் மேடை". ஒரே முத்தம்" பழக்கூடை" "வெள்ளிக் கிழமை" ,"காகிதப்பூ", போர்வாள்", ஆகிய அனைத்துமே சீர்திருத்த நாடகங்கள் ஆகும்.காகிதப் பூ நாடகத்தில் கலைஞரும் நடித்தார்.

இணையற்ற நாடக ஆசிரியர், இலக்கியவாதி, பாடலாசிரியர்,கதை வசனகர்த்தா, படத் தயாரிப்பாளர்,நாவலாசிரியர்,தொல்காப்பிய பூங்கா சமைத்தவர், குறளோவியம் கண்டவர், என அனைத்துத் துறையிலும் கோலோட்சி நின்றதுடன்...இணையில்லா மக்கள் தலைவராகவும் திகழ்கிறார்.

இந்த அதிசயம் வேறு எந்த எழுத்தாளர்களுக்கோ...தலைவர்களுக்கோ கிடைக்காத பேறு எனலாம்

கே ஆர் ராமசாமி
-------------------------------
                     
அண்ணா, கலைஞர் பற்றி படிக்கும் போதே நாடக உல்கில் நம் ஞாபகத்திற்கு வர வேண்டிய ஒரு நடிகர் கே ஆர் ராமசாமி ஆவார்,


மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் தனது 11 வயதிலேயே நடிக்க வந்தவர்.அந்த நாட்களில் இப்படிப்பட்ட நாடக குழுவில் நடிக்க வரவேண்டுமாயின் ஆறு தகுதிகள் இருக்க வேண்டும்.அப்படி ஆறு தகுதிகளையும் கொண்டவராகத் தகழ்ந்தவர்களில் குறிப்பிடத் தக்கவர் இவராவார்.

ஆமாம்..அந்த ஆறு தகுதிகள் என்ன..

வயது,தோற்றப் பொலிவு,குரல் வளம்,பாடும் திறன்,இசை ஆர்வம்,நடிப்புத் திறன் ஆகியவையே ஆகும்

கே ஆர் ராமசாமி, அண்ணா எழுதிய வேலைக்காரி நாடகத்தை பின்னாளில் கிருஷ்ணன் நாடகக் குழு என ஒரு குழுவினை ஆரம்பித்து நடத்தினார்.இந்நாடக்ம் ஓராண்டு, தஞ்சை ராமநாதன் செட்டியார் ஹாலில் நடைபெற்றது

பின்னர், அண்ணாவின் ஓரிரவு நாடகம்.இந்நாடகப் போஸ்டர்களில் கே ஆர் .ராமசாமி, கதை-வசனம் அறிஞர் அண்ணாத்துரை என போட்டார் என்பது பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

இவரது, தந்தை காலமான அன்று கூட காலை இறுதிக்கடன் களை முடித்துவிட்டு, மாலை ராமாயணம் நாடக்த்தில் ஹனுமனாக நடித்தவர் இவர்

வி.கே.ராமசாமி-------

                   
----------------------வி கே ராகசாமி போற்றத்தக்க வேண்டிய நாடக நடிகர் ஆவார்.ருத்ர தாண்டவம், பம்பாய் மெயில் போன்ற பல நாடகங்களை நடத்தினார்.இவர் சிறு வயது முதலிலிருந்தே..வயதான பாத்திரங்களில் நடித்து வந்தார் என்பதே சிறப்பாகும் 

No comments:

Post a Comment