Tuesday, March 22, 2016

17 - கேபி யின் ராகினி ரெக்ரியேஷன்ஸ்

                           



கே.பாலசந்தர் 1953ஆம் ஆண்டிலிருந்தே  நாடகங்கள் எழுதி நடித்து இருக்கிறார்.இவர் ஏ ஜி ஸ் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த நேரத்திலேயே அங்கு இருந்த அலுவலர்   சங்கத்திற்காக இருபதிற்கும் மேற்பட்ட தமிழ்...ஆங்கில நாடகங்களை எழுதி நடித்து..இயக்கி இருக்கிறார்.

புஷ்பலதா....என்றொரு நாடகம்.இந்நாடகத்தில் புஷ்பலதா என்றொரு கதாபாத்திரம்.அது பற்றி அனைவரும் பேசுவர்.ஆனால் அந்த பாத்திரம் மேடைக்கே வராது,அந்தப் பாத்திரத்தின் வெற்றியே பாலசந்தரை தன் மகளுக்கு புஷ்பா என்ற பெயரை வைக்க வைத்தது என்றால்....அவரின் நாடகப் பற்றை என்னவென்று சொல்வது?

பின், மேஜர்  சந்திரகாந்த் என்ற நாடகத்தை ஆங்கிலத்தில் எழுதினார்.அந்த நேரத்தில், தமிழ் நாடகங்களுக்கு இருந்த ஆதரவைப் பார்த்து..அந்த நாடகத்தை தமிழில் எழுதி..தன் ராகினி ரெக்ரியேஷன்ஸ் குழு சார்பில் அரங்கேற்றினார்.

கேபியின் நண்பரும், தோலைபேசி நிலையத்தில் அதிகாரியாய் வேலை பார்த்தவருமான  சுந்தரராஜன் என்ற நண்பரை..அந்நாடகத்தில் ஓய்வு பெற்ற ராணுவ  அதிகாரி வேடத்தில் நடிக்க வைத்தார்.இந்நாடகத்திற்குப் பிறகு, அந்த நண்பர் அனைவராலும் மேஜர் சந்திரகாந்த் என்றே அழைக்கப்பட்டார்.ஒன் செட்   நாடகமான இதில் செட் டிசைன் பண்ணும் வேலையை ரங்கநாதன் என்ற ரங்கண்ணா அமைத்தார்.பின் பல நாடகங்களில் இவர் கைத்திறன் போற்றப்பட்டது.இந்நாடகத்தில் பெண் கதாபாத்திரமே கிடையாது.நாடகம் சூபர் ஹிட்

பின்னர் தொடர்ந்து சர்வர் சுந்தரம்,மெழுகுவர்த்தி,நீர்க்குமிழி,நாணல்,எதிர் நீச்சல் என வெற்றி நாடகங்கள் அரங்கேறிய வண்ணம்  இருந்தது.இவரது நாடகங்கள் அனைத்தும் திரைப்படமானது.

இவரது நாடகங்களில் மேஜர் சுந்தரராஜனைத் தவிர, நாகேஷ்,ஸ்ரீகாந்த், சௌகார் ஜானகி, மனோரமா, எஸ்.என்.லட்சுமி ஆகியோர் நடித்தனர்.

இவரது நாடகங்களைக் காண வந்த ரசிகர்கள் பலர் டிக்கெட் கிடைக்காது திரும்பினர்.தவிர்த்து...இவரது நாடகங்களுக்கு பிளாக்கில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன என்பது..இங்கு பதிவு செய்யப் பட வேண்டியது அவசியம்.

வி.எஸ்.ராகவன் அவர்களுக்கும் பாலசந்தர் நாடகங்களை எழுதிக் கொடுத்துள்ளார்.

பாலசந்தரின் அனைத்து நாடகங்களுமே மனித உறவுகளிடையே ஆன சிக்கல்கள், பிரச்னைகள் ஆகியவற்றைக் கருப்பொருளாகக் கொண்டு அமைந்தன எனலாம்.

நாடகம், நாடகக் கலைஞர்கள் என்றால் பாலசந்தருக்குக் கடைசிவரை பிரியம் இருந்தது.

மௌலி. விசு ஆகியவர்களின் நாடகங்களைப் படமாக்கியதுடன்...அவர்களை திரைப்பட இயக்குநர்களாகவும் ஆக்கினார்.

தனது 80ஆவது வயதிலும் இவர் எழுதி மேடையேற்றிய நாடகங்கள் பௌர்ணமி, ஒரு கூடை பாசம்.

ஷ்ரத்தா நாடகக் குழுவிற்காக எழுதிக் கொடுத்த நாடகம் இடியுடன் கூடிய மழை

தமிழ் நாடக உலகம் மறக்கமுடியா கலைஞன் கே.பாலசந்தர். 

No comments:

Post a Comment