Thursday, March 24, 2016

19- விசுவின் நாடகங்கள்

                         

எம் ஆர்,விஸ்வநாதன், எம்.ஆர்.ராஜாமணி, எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி,ஆகிய மூன்று சகோதரர்கள், பி.சந்திர மௌலி, கணேஷ், நான் ஆகிய அனைவரும் நண்பர்கள்.அம்பத்தூர்வாசிகள்.

 அனைவரும் ஒன்று சேர்ந்து, யங்க்ஸ்டர்ஸ் கல்சுரல் அகடெமி என்ற சபையை ஆரம்பித்தோம்..சிவாஜிகணேசன் பத்மஸ்ரீ விருது பெற்ற போது அவருக்கு பாராட்டுவிழா நடத்தினோம்.அதில், மௌலி முதன் முதலாக எழுதிய
காதலுக்கு கண்ணில்லை நாடகம் நடத்தினோம்.

பின், ரத்தபாசம் நாடகத்தை அனுமதி பெற்று வாங்கி  நடத்தினோம்

முதல் மூவர் தான் பின் திரைப்படத்திலும் பிரகாசித்த விசு, ராஜாமணி, கிஷ்மூ ஆவர்.

சந்திரமௌலி, மௌலி ஆகி நாடகம், திரைப்படம் என வெற்றிக் கொடி நாட்டினார்.

கணேஷ், பிரியதரிஷினி என்ற நாடகக் குழு ஆரம்பித்து வெற்றிக் கொடி நாட்டினார்.

நான், வங்கி ஒன்றில் வேலை செய்து வந்ததால்...முழு வீச்சுடன் இயங்க முடியவில்லை.ஆனாலும், பின்னர் ஒரு சபாவும், ஒரு நாடகக் குழுவையும் ஆரம்பித்தேன்..வெள்ளித் திரைக்கு ஆசைப்படவில்லை.

இனி, விசு அவர்களின் நாடகப்பணியைப் பார்ப்போம்...

இயக்குநர் கே.பாலசந்தரிடம் பயின்ற அனைவரும் சோடைபோகாதவர்கள்.விசு மட்டும் விதி விலக்கா என்ன..

விஸ்வசாந்தி என்ற பெயரில் நாடகக் குழு ஆரம்பித்து பலவெற்றி நாடகங்களை நடத்தினார். "உறவுக்குக் கை கொடுப்போம்", "ஈஸ்வர அல்லா தேரே நாம்", "பாரத மாதாவுக்கு ஜே", 'குடும்பம் ஒரு கதம்பம்"அவர்களுக்கு வயது வந்துவிட்டது", "அவள் சுமங்கலிதான்""மோடி மஸ்தான்" ஆகிய நாடகங்களைக் குறிப்பிடலாம்.

பிறநாடகக் குழுக்களுக்கும் விசு சில நாடகங்களை எழுதினார்.அவற்றில் காத்தாடி ராமமூர்த்திக்கு எழுதிய "பட்டிணப்பிரவேசம்" டௌரிகல்யாணம் 'நாடகங்களும்,ஏ,ஆர்.எஸ் நடித்துக்கொண்டிருந்த வாணி கலா மந்திருக்கு  எழுதிய:தேவியர் இருவரும்..குறிப்பிட வேண்டியவை,

இவரது நாடகங்களைப் பார்த்த கேபி இவரை தன் யூனிட்டில் வசனகர்த்தாவாக சேர்த்தார்.பின், இவர் தன் திறமையால், நடிப்பால், வசனத்தா;' ஆபாசமற்ற நகைச்சுவை வசங்களால் மக்களைக் கவர்ந்தார்.

இவரது சகோதரர்கள் ராஜாமணியும், கிஷ்மூ வும்..இவர் நாடகங்களில் நடித்தனர்.ராஜாமணி தனிக்குழு ஆரம்பித்து, குரிய கோஸ் ரங்கா எழுதிய "கீழ்வானம் சிவக்கும்" நாடகத்தை நடத்தினார்.பின்னர் அது சிவாஜி நடிக்க திரைப்படமானது.

விசுவின் நாடகங்கள் அனைத்தும் படமாயின.மோடிமஸ்தான் நாடகமே "மணல்கயிறாக" திரைப்படமாகியது.உறவுக்குக் கை கொடுப்போம், சம்சாரம் ஒரு மின்சாரம் என்ற பெயரில் படமாகி தேசிய விருது பெற்று சாதனை படத்தது.குடும்பம் ஒரு கதம்பம் நாடகம் திரைப்படமாகி விசு சிறந்த நடிகர் என்பதை உறுதிச் செய்தது.

பின்னர்...நாடகம் போடுவதை நிறுத்தினார்..பட வாய்ப்புகளும் சற்று குறைய , சன் டீவியில் அரட்டை அரங்கம் என்ற விவாத நிகழ்ச்சியைத் துவக்கி பல ஆண்டுகள் சிறப்பாக நடத்தினார்.

நாடகப் பற்று குறையாத இவர் சமீபத்தில் "கொஞ்சம் யோசிங்க பாஸ்" என்ற நாடகத்தை அரங்கேற்றினார்

 நண்பர் கணேஷ், பிரசன்னாவுடன் சேர்ந்து பிரியதர்ஷினி என்றொரு குழுவை ஆரம்பித்து, வெங்கட் எழுதிய "தாம்பத்யம் ஒரு சங்கீதம்", வேதம் புதிது கண்ணன் எழுதிய சுப முகூர்த்தப் பத்திரிகை, ரமணி எழுதிய, "நவீன சுயம்வரம்" ஆகிய நாடகங்களை நடத்தினார்

No comments:

Post a Comment